நாகர்கோவிலில் வீட்டில் பணம், செல்போன் திருட்டு…!!

நாகர்கோவிலில் துணிகரம்: வீட்டில் பணம், செல்போன் திருடி விட்டு மர்ம நபர் ஓட்டம் 

நாகர்கோவில்,
நாகர்கோவில் வட்டக்கரையை பகுதியை  சேர்ந்தவர் அலோசியஸ் (வயது 54), இவர் அங்கே  கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவரும், இவருடைய மகள் ரேச்சல் (24) என்பவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் குதித்து தூங்கிக் கொண்டு இருந்த  ரேச்சல் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த ரேச்சல் திருடன்…திருடன்… என்று கூச்சலிட்டார்.. உடனே சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டில் இருந்து தப்பி ஓடினர். சத்தம் கேட்டு அலோசியஸ் விழித்துக் கொண்டார்.
பின்னர் தப்பி ஓடிய மர்ம நபர்களை அவர் பிடிக்க முயன்றனர்  ஆனால் முடியவில்லை. தப்பிச் சென்ற மர்ம நபர்கள் அலோசியஸ் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும், ஒரு செல்போனையும் திருடிச் சென்றுள்ளனர்.ரேச்சல் விழித்துக்கொண்டதால் அவர் கழுத்தில் இருந்த  நகை தப்பியது..
அலோசியஸ்  வீட்டின் முன்புறத்தில் ஜன்னல் உள்ளது.அந்த ஜன்னல் வழியாக வீட்டு கதவை மர்ம நபர்கள் திறந்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர். இதுதொடர்பாக நேசமணிநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து வீட்டின் அருகே எங்கேனும் கண்காணிப்பு கேமரா உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment