நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி நட்சத்திர விடுதியின் குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளரான சுனில் சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஸ்ரீ தேவியின் மரணம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடவும் கோரியிருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.