தாய்லாந்தில் டபுள் டக்கர் பேருந்து மரத்தில் மோதிக் கவிழ்ந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

17 பேர்  தாய்லாந்தில் டபுள் டக்கர் பேருந்து மரத்தில் மோதிக் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தனர். நகான் ரட்சசீமா (Nakhon Ratchasima) மாகாணத்தில் விடுமுறையைக் கழிப்பதற்காக சென்ற 50 பேர் டபுள்டக்கர் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்தப் பேருந்து மலைச் சரிவில் சென்று கொண்டிருந்த போது பிரேக் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரில் வந்த வாகனத்துடன் மோதியதோடு சாலையோர மரத்தில் மோதிக் கவிழ்ந்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment