சென்னை ஐசிஎப் லிருந்து வடக்கு ரயில்வேக்கு வழங்கப்பட்டது புதிய அதி நவீன ரயில்…..!!

சென்னை ஐசிஎப் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வடக்கு ரயில்வேத்துறைக்கு புதிய அதி நவீன ரயில் வழங்கப்பட்டது.
சென்னை ஐசிஎப் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதி நவீன வசதி கொண்ட புதிய ரயில் 18 ரக ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதே தொழில் நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட புதிய ரயில் இன்று வடக்கு ரயில்வேத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
2 ஆயிரத்து 618 பயணிகள், பயணிக்கும் வகையில் உறுவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் 26 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. 25 கிலோவாட் மின்சாரத்தில் இயக்கும் இந்த ரயில் மின்சார உபயோகத்தை 35 சதவீதம் குறைக்கும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment