ஏடன் வளைகுடா பகுதியில் சாகர் என்ற புயல் உருவாகியுள்ளது வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ஏடன் வளைகுடா பகுதியில் சாகர் என்ற புயல் உருவாகியுள்ளதால், தென்மேற்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாகத் தெரிவித்தார். சாகர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கிழக்கு திசையில் ஏமன் நோக்கி செல்லகூடும் என்பதால் தென் மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Image result for சென்னை வானிலை ஆய்வு மையம்

கடந்த 24 மணி நேரத்தை பொருத்த வரையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பதிவாகியுள்ளது. வரும் 24 மணி நேரத்தை பொருத்த வரையில் தமிழகத்தின் ஒரு இரு இடங்களில் மழை பெய்யக்கூடும்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment