என்னை பற்றி வதந்தி பரப்பினால் கோர்ட்டுக்கு செல்லுவேன் : ராய் லெட்சுமி

  • நடிகை ராய் லெட்சுமி குறித்து வதந்தியான தகவல்கள் பரவி வருகிறது.
  • நடிகை ராய் லெட்சுமி கர்ப்பமாக இருப்பதாக பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

நடிகை ராய் லெட்சுமி பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இவரை பற்றிய வதந்தியான தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து ராய் லெட்சுமி சில கோபமான கருத்துக்களை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, சில நாட்களாகவே அவர் கர்ப்பமாக இருப்பதாக பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். என் வி‌ஷயத்தில் யார் வேண்டுமானாலும் தலையிட்டு உங்கள் இஷ்டத்துக்கு பேசலாம் என்று அர்த்தம் அல்ல.

ஒரு நாள் நான் மாங்காய் சாப்பிட்டதை யாரோ ஒருவர் பார்த்திருக்கிறார். உடனே நான் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி பரப்பிவிட்டிருக்கிறார். இதை தடுத்து நிறுத்துவதற்கு நான் கோர்ட்டிற்குகூட செல்வேன்’ என்று கோபமாக கூறி இருக்கிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment