உங்களுக்கு கூந்தல் பிரச்சனையா….? இதோ…. வீட்டிலே அதற்கு தீர்வு காண்பதற்கான வழிகள்…..!!!

இன்றைய இளம் தலைமுறையினர் மிக பெரிய பிரச்சனையே கூந்தல் பிரச்சனை தான். அதற்க்கென பல ஆயிரங்கள் செலவு செய்து மருத்துவம் பார்த்தாலும், அதனால் பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. இதற்க்கு தீர்வு காண்பதற்கு வீட்டிலேயே நாம் இயற்கையான முறையில் ஷாம்பூ தயாரிக்கலாம்.

Image result for வெந்தயத்தை தயிருடன்

தேவையான பொருட்கள் :

  • கெட்டியான தயிர் – அரை கப்
  • வெந்தயம் – 2 மேசைக்கரண்டி

செய்முறை :

வெந்தயத்தை முதல் நாள் இரவிலேயே ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த வெந்தயத்தை நன்றாக கூழாக அரைக்க வேண்டும். அரைத்த வெந்தயத்தை தயிருடன் கலக்க வேண்டும். அதன் பின் முடியை பிரிவுகளாக பிரித்து தாராளமாக இந்த கலவையை தடவ வேண்டும். முடியை தளர்வாக கட்டி, குறைந்தது அரை மணி நேரமாவது வைத்திருக்க வேண்டும்.

Related image

பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் ஷாம்பூவால் அலசி, கூந்தல் கண்டிஷனரை வழக்கமாக உபயோகிக்க வேண்டும். முதல் உபயோகிப்பிற்கு பின் நீங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள். இதை வாரம் இரு முறை 2 மாதங்களுக்கு தொடர்ந்து உபயோகித்தால், நீங்கள் எந்த முடி பிரச்சனைகளுக்காகவும் சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அவசியம் வராது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment