ஆசிரியையுடன் இருந்த உல்லாச வீடியோவை வெளியிட்டு தலைமறைவான வாலிபர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ஆசிரியை நெல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சுமார் 45 வயது இருக்கும் இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் சூப்ரவைசராக பணியாற்றி வருகிறார்.

அந்த ஆசிரியை எப்போதும் அருகில் உள்ள மார்கெட்டில் காய்கறி வாங்குவது வழக்கம் அப்போது பழக்கமானவர்தான் மணிவேல் இவருக்கு 25 வயதிருக்கும் இவர் அங்கு தக்காளி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஆசிரியைக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கடைசியில் கள்ள காதலாக மாறியது. ஆசிரியை சம்பளத்தில் பாதியை கொடுத்து செலவு செய்ய கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

அந்த வாலிபர் இவர்கள் இருவரும் உல்லாசாமாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்து லட்சகணக்கில் பணம் கேட்டு ஆசிரியையை மிரட்டியுள்ளார். வாலிபர் கேட்ட பணத்தை கொடுக்க தாமதமானதால் கடுப்பான வாலிபர் அவற்றை யூ-டியூபில் பதிவேற்றி விட்டார் இந்த விஷயம் பள்ளி நிர்வாகம் வரை தெரிந்து அவரை பள்ளியில் இருந்து நீக்கும்படி பெற்றோர்கள் போராடும் அளவிற்கு சென்றுள்ளது. இதனையடுத்து ஆசிரியர் சஸ்பென்ட் செய்யபட்டார். அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்டார். தகாத உறவு ஆசிரியரை வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு அவமானத்தை பரிசாக அளித்து விட்டு சென்றது.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment