சிறுவனை சித்திரவதை செய்யும் இளைஞர்கள்! வலுக்கும் கண்டனங்கள்!

இன்றைய இளம் தலைமுறையினர் அனைவரையுமே டிக் டாக் செயலி அடிமைப்படுத்தி தான் வைத்துள்ளது. இந்நிலையில், சில இளைஞர்கள் ஒரு சிறுவனை ஊருக்கு ஒதுக்குபுறமாக அழைத்து சென்று, அவனை கடத்த போவதாகவும், யாருக்கும் தெரியாமல், சீக்கிரமாக காரை எடுத்துக் கொண்டு வருமாறு தனது நண்பனிடம் அலைபேசியில் கூறியுள்ளார்.
இதனை கேட்ட சிறுவன், “ஐயோ நான் என்ன பண்ண போறேன், அம்மா வாங்கம்மா… என்ன போட்டு சாகடிக்கிரங்கம்ம்மா என கதறியுள்ளார். இதை கேட்ட இளைஞர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். அதன் பின் அந்த சிறுவன் பயத்தில், என்னை விட்டுவிடுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறேன். என்று கூறியுள்ளார்.
இறுதியில் அங்கு வந்த இரு இளைஞர்களிடம் அந்த சிறுவனை ஒப்படைகின்றனர். இந்த வீடியோவை டிக் டாக்கில் பதிவிட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த வீடியோ படு வைரலாகி வருகிறது. இளைஞர்களின் இந்த செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.