களத்தில் என்னை விரைவில் சந்திப்பீர்கள் – தீபக் சாஹர் நம்பிக்கை..!

உலகளவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு 8 அணிகளை சார்ந்த வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் அமீரகம் சென்றடைந்தனர். இந்நிலையில், ஐபிஎல் தொடருக்காக கடந்த 21- ம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டனர்.

இந்நிலையில், நேற்று மேற்கொண்ட பரிசோதனையில் தீபக் சாஹர் மற்றும் ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதனால் அணைத்து ரசிகர்களும் அவருக்காக பிராத்தனை செய்தனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெள்ளிட்டுள்ளார், அந்த வீடியோவில் உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் நான் இப்பொழுது மிகவும் நன்றாக உள்ளேன் உடற்தகுதியுடன் இருப்பதாக என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன் விரைவில் நீங்கள் என்னை களத்தில் காணலாம் என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.