3 ஆண்டு சட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுக்கான LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, சட்டப் பல்கலைகழகத்தில் 3 ஆண்டுக்கான எல்.எல்.பி. மற்றும் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்புக்கு சேர இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை http://tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.