உத்திர பிரதேச மாநிலத்தில அயோத்தியில் சுமார் 221 மீ உயரம் உடைய ராமர் சிலை அமைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் மாநிலத்தில் உள்ளது அயோத்தி இது ராமரின் பிறப்பபிடமாக போற்றப்படுகிறது.இந்நிலையில் அங்கு கோயில் கட்டுவது தொடர்பாக நீண்ட நாள்களாக சர்ச்சை நீடித்து வருகிறது.இந்நிலையில் ராமர் பிறந்த இடத்தில் அங்கு கோவிலை கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு, போடப்பட்டது.இந்த வழக்கினனை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.வழக்கு நடந்து வரும் நிலையில் உத்திரபிரதேச மாநில முதல்வர் அயோத்தியில் பகபவான் ராமருக்கு மிக பிரமாண்டமான சிலை அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து பலரும் ராமர் கோவில் விவகாரத்தில் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் உத்திர பிரதேச அரசின் முதன்மை செயலளாரான அவினாஸ் அவஸ்தி இது குறித்து தெரிவிக்கையில் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் 221 மீட்டர் உயரத்தில் வெண்கலத்தில் சிலை அமைக்கப்பட இருக்கின்றது. மேலும் அமைக்கப்படும் ராமர் சிலையினுடைய பாதங்களுக்கு கீழ் 50 மீ பீடம் அதன் மேல் 151 மீ உயரத்தில் ஒரு முழுஉருவ வெண்கல சிலை மற்றும் 20 மீ., உயரத்திலான ஒரு குடை வடிவமைக்கப்பட இருக்கிறது.மேலும் ராமர் சிலைக்கு கீழே அமையும் அடித்தளத்தில் அயோத்தியின் வரலாறு மற்றும் ராமரின் ஜென்மபூமியின் பின்னணி குறித்த விவரங்களை உள்ளடக்கிய விளக்கமும்,ஒரு நவீன அருங்காட்சியகமும் மற்றும் விஷ்ணுவின் அனைத்து விதமான அவதாரங்களை குறித்த விரிவான விளக்கங்கள் இடம்பெறும். இவ்வாரு தெரிவித்த அவர் ராமர் சிலை அமைப்பதற்கான ஏற்ற இடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் மண் மற்றும் காற்று ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் கூறினார்.
DINASUVADU
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…