டெலிவரி பாய் மீது காரை மோதிய யாஷிகா…!

நடிகை யாஷிகா ஆனந்த் சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் நண்பர்களுடன் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் உணவு டெலிவரி செய்யும் பரத் என்பவர் மீது மோதியது. அதுமட்டுமின்றி அங்கிருந்த கடை ஒன்றின் மீதும் மோதியது.
இதில் உணவு டெலிவரி செய்யும் பரத் படுகாயம் அடைந்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்தவுடன்  யாஷிகா ஆனந்த் மற்றொரு காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அவருடைய நண்பர்கள் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

author avatar
Vidhusan