ஆஹா…7 போட்டியில் 50 விக்கெட் …’உலக சாதனை’ படைத்த இலங்கை வீரர்.!!

டெஸ்ட்  போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இலங்கை அணி வீரர் பிரபாத் ஜெயசூர்யா படைத்துள்ளார். 

இலங்கை அணி தற்போது அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அந்த வகையில் அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்  போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

அதன்படி, பிரபாத் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகளின் ஆல்ஃப் வாலண்டைன் அதிவேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை (எட்டு போட்டிகள்) வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருந்தார். தற்போது அவருடைய அந்த சாதனையை பிரபாத் ஜெயசூர்யா முறியடித்துள்ளார்.

மேலும், பிரபாத் ஜெயசூர்யா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்களும், அடுத்த இன்னிங்சில் தற்போதுவரை,  2 விக்கெட்  என மொத்தமாக 7 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் இவர் இந்த உலக சாதனையை படைத்துள்ளார். இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.