1,000 பானையில் பொங்கல் வைத்து வழிபாடு..!

தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் முன்பு பக்தர்கள் 1,000 பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரகாளியம்மன் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் பாக்கு படைத்தல் விழா நடைபெற்றது.  பின்னர்,  கடந்த 8ம் தேதி முதல் பூத்தட்டு சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

நேற்று முன்தினம்காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று கோவில் கதவைடைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், கோவில் முன்பு பக்தர்கள் 1,000 பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

 

 

author avatar
murugan