இரவு 12 மணிக்கு கூட பெண்கள் பாதுகாப்பாக செல்லலாம் – அமைச்சர் ஜெயக்குமார்.!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஔவையாரின் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா பாண்டியராஜன், சரோஜா, பெஞ்சமின், பாடநூல் கழக தலைவர் வளர்மதி, சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்புகள், கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கியது அதிமுக மட்டுமே என்றும், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதால், மகாத்மா காந்தி கூறியது போல் தமிழ்நாட்டில் இரவு 12 மணிக்கும் பெண்கள் நகைகளை அணிந்து பாதுகாப்பாக வெளியில் சென்று வரலாம் என்று தெரிவித்தார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்