17 வயது சிறுவனால் கற்பழிக்கப்பட்ட பெண் – சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வீடியோவால் கணவனால் விரட்டியடிப்பு!

17 வயது சிறுவனால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியதால் அவரது கணவர் வீட்டை விட்டு விரட்டியடித்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த திருமணமாகிய பெண் ஒருவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பதாக 17 வயது சிறுவனால் கற்பழிக்கப்பட்டுள்ளார். அதன் பின் அந்த சிறுவன் அவளிடம் இதை நான் விடியோவாக எடுத்து வைத்துள்ளேன் என அதை காண்பித்து, இங்கு நடந்ததை வெளியில் கூறினால் இந்த விடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண்ணும் பயத்தில் யாரிடமும் சொல்லவில்லை.

இந்நிலையில் அந்த சிறுவன் அந்த வீடீயோவை அப்பெண் அவரது கட்டுப்பாட்டை மீறாதபொழுதிலும், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ஊர் ஜனங்கள் மற்றும் உறவினர்கள் அந்த பெண்ணின் கணவரிடம் இது குறித்து கூறி அந்த வீடியோவை காண்பித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் அப்பெண்ணை வீட்டை விட்டு வெளியில் விரட்டியடித்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அப்பெண் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளதை அடுத்து போலீசார் அந்த சிறுவனை தேடி வருகின்றனர்.

author avatar
Rebekal