வடமாநிலத்தவர்கள் இல்லாவிட்டால் கட்டுமான தொழில்கள் முடங்கும் – கட்டுமான தொழிலாளர்சங்கம்

வடமாநில தொழிலாளர்கள் என சாதாரணமாக நினைக்கிறோம் என கட்டுமான தொழிலாளர் சங்கம் தலைவர் பேட்டி. 

கடந்த சில நாட்களுக்கு  முன், திருப்பூர் ரயில் நிலையத்தில் வதந்தியால் திடீரென்று வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியது.

இதனையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் பலர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதுகுறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. காவல்துறை தொடர்பில் தண்டவாளத்தை அவர் கடக்கும் முயன்ற போது பீகார் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்  தெரிவித்துள்ள நிலையில், காவல்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பீகார் மாநில அதிகாரிகளும், தமிழக அரசு அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் பேட்டி 

இந்த நிலையில், கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், வடமாநில தொழிலாளர்கள் என சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால் அவர்கள் நம் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். வடமாநிலத்தவர்கள் இல்லாவிட்டால், கட்டுமான தொழில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்.

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழக அரசு சிறந்த முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment