இன்று முதல் 30க்குள்.. ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை திட்டம் – உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு

ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவியரின் விவரங்களை வரும் 30-ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய உத்தரவு.

அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவியரின் விவரங்களை http://penkalvi.tn.gov.in இணையதளத்தில் வரும் 30-ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் பயன்பெறும் மாணவியர்களின் விவரங்களை இன்று முதல் 30.06.2022க்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணைய தளத்தில் பதிவிடப்பட வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் (Government Schools, Corporation Schools, Municipal Schools, Panchayat Union Schools, Adi Dravidar and Tribal Welfare Schools, Kallar Reclamation Schools, Forest Department Schools and other Schools managed by Government departments) 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று அரசு / அரசு உதவி பெறும்/ கயநிதிக் கல்லூரிகள்/ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறுவர். இத்திட்டத்திற்கென இளநிலை (Under Graduate) பயிலும் மாணவியரிடமிருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசு பள்ளி விவரங்கள் கோரப்படுகின்றன.

அதன்படி, ஆதார் நகல்,வங்கி கணக்கு புத்தக நகல், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் உள்ளிட்ட  விவரங்கள் சார்ந்த மாணவியர் மற்றும் பொறுப்பாசிரியர்கள் (Tutor) மூலம் உள்ளீடு செய்யப்பட வேண்டும். சரியான விவரங்கள் உள்ளீடு செய்யப்படுவதை சார்ந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவியர்கள் பதிந்திடும் தங்களின் அலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும் என்பதால், அலைபேசியை தவறாது கொண்டு வர வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்க்கு தகவல் அளித்து கல்லூரிக்கு வரவழைத்து தேர்வு நடைபெற்றாலும் தேர்வு முடித்த பிறகு இந்த விவரங்களை விரைந்து உள்ளீடு செய்தல் வேண்டும்.

இணைய வசதி உள்ள மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைபேசி அல்லது கணினி வாயிலாக மேற்காண் இணைய முகவரியைப் பயன்படுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதனை சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்திட்டத்தினை. தொழில்நுட்பக் கல்வி ஆணையரி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி கல்லூரி வாரியாக கண்காணித்து உடனுக்குடன் விவரங்கள் பதிவிடப்படுவதை உறுதி செய்து அனைத்து மாணவியர் விவரங்களும் வரும் 30 க்குள் பதிவிடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்குள் கல்லூரி வாரியாக பதிவிடப்பட்ட மாணவியரின் எண்ணிக்கை குறித்த அறிக்கையினை தவறாது அரசுக்கு அனுப்ப வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment