செப்டம்பர் முதல் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர அனுமதியா? – விப்ரோ தலைமை அலுவலர் …!

செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர, அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று விப்ரோவின் தலைமை ஹெச்.ஆர் சவுரப் கோவில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பரவிய கொரோனா பரவல் காரணமாக,ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதனால்,தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது வீட்டிலிருந்தே பணி புரிந்து வருகின்றனர். எனினும்,தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால்,குறைந்த பட்ச ஊழியர்களுடன் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.

இந்நிலையில்,செப்டம்பர் முதல் ஊழியர்களை படிப்படியாக மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று விப்ரோவின் தலைமை மனிதவள அலுவலர் (ஹெச்.ஆர்) சவுரப் கோவில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 14 ம் தேதி நிறுவனத்தின் 75 வது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது அதன் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி கூறுகையில்,”இந்தியாவில் 55 சதவீத ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது”, என்று கூறினார். இருப்பினும், அவை முதல் அல்லது இரண்டாவது டோஸ் அளவு தடுப்பூசியா? என்பதை அவர் குறிப்பிடவில்லை.

இதற்கிடையில்,டி.சி.எஸ் நிறுவனத்தின் கடந்த வார நிலவரப்படி, அதன்  ஊழியர்களில் 70% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, செப்டம்பர் மாதத்திற்குள் அதன் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்று தெரிவித்தது.

ஆனால்,இன்ஃபோசிஸ் ஊழியர்களில் 59% பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து,இன்போசிஸின் தலைமை இயக்க அதிகாரி பிரவீன் ராவ்,பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறுகையில்: “1,20,000 ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்காக மொத்தமுள்ள 2,30,000 டோஸ் தடுப்பூசிகளில் குறிப்பிட்ட அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.இதனால் 59% பேர் குறைந்தது முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.மேலும்,ஊழியர்களில் 10% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர்”,என்று தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

உங்கள் நகத்தை வைத்து உங்கள் அகத்தின் ஆரோக்கியத்தை தெரிஞ்சுக்கோங்க.!

Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…

2 mins ago

போஸ்டரில் கூட வர மாட்டேன்னு சொன்னாங்க! பிரேமம் குறித்து உண்மையை உடைத்த மடோனா!

Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு கூறியதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு…

6 mins ago

கிரிக்கெட்ல இத்தனை வகை டக்-அவுட் இருக்கா ? தெரிஞ்சுக்கோங்க !!

Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது…

9 mins ago

7 மாத ஆண் குழந்தை… உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனை நிறைவு.!

Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…

23 mins ago

பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!

Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…

54 mins ago

‘அவுட் இல்லனாலும் .. அது தோல்வி தான்’ ! டிஆர்எஸ் விதியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா !

Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…

59 mins ago