தொடரும் யானைகள் உயிரிழப்பு..! மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பூச்சியூர் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. 

கோவை பெரியநாயக்கன்பாளையம் பூச்சியூர் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானையை காட்டுக்குள் அனுப்ப முயற்சித்த போது மின் கம்பம் விழுந்து யானையின் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது.

அண்மையில் தர்மபுரியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில் தற்போது கோவையில் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment