பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுபவர் இவரா .?

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சுசித்ரா வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் .அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் .

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரேகா , வேல்முருகன் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.இந்த வார நாமினிஷேனில் அனிதா ,சுச்சி, பாலாஜி,ஆரி,ரியோ, சம்யுக்தா,ரியோ ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது .

இதில் இந்த வாரம் சுச்சி வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டினுள் நுழைந்த பாடகி சுசித்ரா குறைந்த சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் ,எனவே அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.உண்மையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.