கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து WHO தலைவரின் கருத்து!

கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து WHO தலைவரின் கருத்து.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஒரு வருடத்திற்குள் அல்லது சில மாதங்களுக்கு முன்பே உலகில் கோவிட் -19 தடுப்பூசி கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இதனையடுத்து, இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் அவர்கள் கூறுகையில், தடுப்பூசிகளை உருவாக்க, உற்பத்தி மற்றும் விநியோகிக்க உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும், வியாழக்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சுற்றுச்சூழல், பொது சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு குழுவுடன் ஒரு கூட்டத்தில் பேசிய டெட்ரோஸ் அதானோம், தடுப்பூசி கிடைப்பது மற்றும் அனைவருக்கும் விநியோகிப்பது ஒரு சவாலாக இருக்கும், மேலும் இதில் அரசியல் விருப்பம் தேவைப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், வைரஸுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்றும், உலகளாவிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை தொற்றுநோய் எடுத்துக்காட்டுகிறது என்றும் ஆரோக்கியத்தை ஒரு செலவாகக் கருதாமல் ஒரு முதலீடாகக் கருத வேண்டும் என்றும் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.