பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ்! வரலாற்று சாதனை படைத்த இங்கிலாந்து.!

டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை, அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து அணி, வரலாறு படைத்துள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கராச்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இதன்மூலம் வரலாற்றில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகளிலும் வென்று ஒயிட்வாஷ் செய்துள்ள முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக எந்த அணியும் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்தது கிடையாது.

3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 304 ரன்களும், இங்கிலாந்து 354 ரன்களும் எடுத்தனர். இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் 216 ரன்கள் எடுக்க 167 ரன்கள் வெற்றி இலக்கை இங்கிலாந்து அணி, 2 விக்கெட் மட்டும் இழந்து 170/2 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்று தொடரை வென்றது.

author avatar
Muthu Kumar

Leave a Comment