பிரதமர் எப்போது அமைதியாக இருக்கிறார்? எப்போது கோபப்படுகிறார்…? – ராகுல் காந்தி

ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி எப்போது அமைதியாக இருக்கிறார்? எப்போது கோபப்படுகிறார் என்பது குறித்து பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது விமர்சித்து கருத்துக்கள் பதிவிடுவது உண்டு.

அந்த வகையில் ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி எப்போது அமைதியாக இருக்கிறார்? எப்போது கோபப்படுகிறார் என்பது குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பணவீக்கம், பெட்ரோல் விலை உயரும் போது, வேலைவாய்ப்பின்மை விவசாயிகள் மற்றும் பாஜக தொண்டர் கொலை பற்றி பிரதமர் அமைதியாக இருப்பதாகவும், கேமரா மற்றும் போட்டோ வாய்ப்பு குறையும் போது விமர்சனங்கள் வரும்போது அவரின் நண்பர்கள் மீது கேள்வி எழுப்பப்படும்போது கோபப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.