பொள்ளாச்சிக்கு நீதி எப்போது – நடிகர் கார்த்தியின் ஆதங்கம்!

கடந்த 2012 -ம் ஆண்டு டெல்லியில் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் சிறுவன் என்பதால் மூன்று வருடம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 

ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மீதம் இருந்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் அந்த 4 பேருக்கும் நேற்று தூக்கு தண்டனை வழங்கி அரசு தனது கடமையை செய்து முடித்தது. இதனால், பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பேசியுள்ள நடிகர் கார்த்திக், நிர்பயா குற்றவாளிகளுக்கு நீதி கிடைத்ததில் சந்தோசம், அனால் பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு எப்போது தீர்ப்பு என கேட்டுள்ளார். 

author avatar
Rebekal