காதலில் விழுந்த செம்பருத்தி பார்வதி.? திருமணம் எப்போது..? அவரே கூறிய பதில்.!

திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நடிகை ஷபானா பதில் அளித்துள்ளார். 

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழிலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் நாடக தொடர் செம்பருத்தி. இதில் நடிகை ப்ரியா ராமன், ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர். இந்த நாடக தொடரின் மூலம் பிரபலமடைந்த ஷபானா மற்றும் பாக்கியலஷ்மி நாடக தொடரில் மூத்த மகனாக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றார்கள்.

இதனை உறுதி படுத்தும் வகையில்,  சில நாட்களுக்கு முன் சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்யன் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது, ரசிகை ஒருவர் நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டுள்ளார்.  அதற்கு ஆர்யன் ஷபானாவை டேக் செய்து “இவங்களுக்கு என்ன சொல்லட்டும்”  என்று கேட்டுள்ளார்.இதற்கு ஷபானா அவர் என்னுடையவர் என பதிவிட்டிருந்தார்.

இதன் மூலம், நடிகர் ஆர்யன்- நடிகை ஷபானா இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. இதனை தொடர்ந்து நடிகை ஷபானவிடம் சமீபத்துல் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு அவர் ” தேதி முடிவு செய்யப்பட்டவுடன் அறிவித்து விடுவோம்” என்று கூறியுள்ளதாக நெட்டிசன்கள் கூறவருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.