போட்டியை நிறுத்த சொன்ன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்..! மறுத்த நடுவர்கள் ..!

ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர்.இப்போட்டி  உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் நடைபெற்று வருகிறது.
நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் இறங்கிய 9 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் அடித்தனர்.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 45.4 ஓவரில்  200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ்  அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் கலந்து கொண்ட கேப்டன் பொல்லார்ட் மற்றும் பல வீரர்கள் காற்று மாசு காரணமாக முகத்தில் மாஸ்க் அணிந்து விளையாடினர்.
விளையாடி கொண்டு இருந்த போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் போட்டியை சிறிது நேரம் நிறுத்தும் படி கேட்டுக்கொண்டனர்.ஆனால் நடுவர்கள் போட்டியை நிறுத்தவில்லை. அதே போல போட்டியின் போது மைதானத்தில் கருப்பு பூச்சிகள் வந்து வீரர்களை தொந்தரவு செய்தது.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

author avatar
murugan