மோடி அரசை எதிர்த்து பேசுபவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர் என டி.ராஜா தெரிவித்தார்.
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மதவெறி அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்தவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மத்திய பாஜக அரசு மக்கள் உழைப்பால் காட்டி வளர்க்கப்பட்ட பொதுத்துறை நிறுவங்களை தனியாரிடம் விற்று வருகிறது என தெரிவித்தார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சி நீடிப்பது நாட்டுக்கு நல்லது அல்ல; 5 மாநிலங்களில் நடக்கக்கூடிய தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை மதவெறியை வைத்து அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்த வேண்டும். மோடி அரசை எதிர்த்து பேசுபவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக மற்றும் இதர கட்சிகளை மக்கள் நிராகரிப்பார்கள் என டி.ராஜா கூறினார்.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நேற்று 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…
Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவி ஆஜராகாததால் தீர்ப்பை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக்…
Rathnam : விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் படத்தின் ட்வீட்டர் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம்…
IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் மிகவும்…
Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…