எச்சரிக்கை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்.!

மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மற்றும் தென் தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிப்பது 2 நாட்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருத்தணியில் வெயில் 104 முதல் 107 டிகிரி வரை இருக்கும். தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர் மற்றும் மதுரையிலும் 2 நாட்களுக்கு கடும் வெயில் தொடரும் என்றும் கூறியுள்ளது. 

மேலும் மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மற்றும் தென் தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பெரியநாயக்கன் பாளையத்தில் 3 செ.மீ மழையும், கமுதியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்