துணை கலெக்டர், டிஎஸ்பி ஆக வேண்டுமா? – இதோ குரூப் 1 தேர்வின் அறிவிப்பாணை வெளியீடு!

குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி, துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 1 முதல்நிலைத் தேர்வு அக்.30ல் நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 1 தேர்வு எழுத இன்று முதல் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரதான தேர்வுக்கான (முதன்மை தேர்வு) தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment