இறுதி கட்டத்தை எட்டியுள்ள வாக்குப்பதிவு.. மாலை 5 மணி நிலவரம்..!

வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குடும்ப குடும்பமாக மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குகள் பதிவாகியுள்ளது. 2.27 லட்ச வாக்காளர்களில், கடந்த 10 மணி நேரத்தில் 1,60,603 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு ஒரு சில மணி நேரத்தில் முடிவடைய உள்ள நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கருங்கல்பாளையம் வாக்குச்சாவடியில் மூன்று தலைமுறையினர் ஒன்றாக வந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விறுவிறுப்பாக மக்கள் வாக்களித்து வறுகின்றனர்

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment