அங்கன்வாடியில் உணவு உண்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்..! குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த, சோமலாபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம். 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த, சோமலாபுரம் அங்கன்வாடி மையத்தில், 33 குழந்தைகள் பயில்கின்றனர். இதில் 17 குழந்தைகள் இன்று அங்கன்வாடிக்கு வந்த்துள்ளனர். அங்கு மாணவர்களுக்கு கலவை சாதம் மாணவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது.

இதை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடிக்கு விரைந்த பெற்றோர்கள் குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்தனர். 10 மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.