கோலி விக்கெட்டை பறித்து..! நான்காவது வீரர் என்ற சாதனை படைத்த அன்ரிச் நார்ட்ஜ்..!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்கியது. நேற்று ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்து உள்ளனர். இதில் ரோஹித் சர்மா 117 ,ரஹானே 83 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இப்போட்டியில் விராட் கோலி 12 ரன்களுடன் வெளியேறினார். கடந்த போட்டியில் விராட் கோலி இரட்டை சதம் விளாசி அசத்தினார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜ் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டாக விராட் கோலி அவுட் ஆகி உள்ளார்.
விராட் கோலி முதல் டெஸ்ட் விக்கெட்டாக கைப்பற்றிய நான்காவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அன்ரிச் நார்ட்ஜ் பெற்றார். இதற்கு முன் தென் ஆப்பிரிக்க வீரர் 2015-ல் ரபாடா ,   2019-ல் செனுரான் முத்துசாமி மேலும் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் இவர்கள் அனைவரும் தங்களது முதல் டெஸ்ட் விக்கெட்டாக விராட் கோலியை அவுட் ஆகி என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan