பிசிசிஐ தேர்தல் முடிந்த பின் ராஜினாமா வினோத்ராய்..!

பிசிசிஐ-யில் உள்ள சீர்கேட்டை சரி செய்து , தேர்தல் நடத்தி முடிக்க லோதா கமிட்டி பிசிசிஐயை செயல்படுத்த வினோத்ராய் தலைமையில் நிர்வாக குழு ஒன்றை தேர்வு செய்தது. இந்த குழு தான் பிசிசிஐ-யில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரத்தை பெற்றது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் கெடு ஒன்றை விதித்தது. அதில் அடுத்த மாதம் 23-ம் தேதிக்குள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என கூறியது. இதை தொடர்ந்து மாநில சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகின்றனர்.

அக்டோபர் 23-ந்தேதி பிசிசிஐ தேர்தல் நடைபெற உள்ளது . இந்தத் தேர்தல் முடிந்த பின் நிர்வாகக்குழு ராஜினாமா செய்யும் என வினோத் ராய் கூறியுள்ளார்.நேற்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக  இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசன் மகள் ரூபா குருநாத்  தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan