முடிவை மாற்றிய விக்ரம் பட இயக்குனர்.! மீண்டும் பழைய ஃபார்முலாவை கையில் எடுக்கும் படக்குழு.!

கோப்ரா படக்குழு ரஷ்யா செல்வதை தவிர்த்து, சென்னையில் செட் அமைத்து அந்த காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

சீயான் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படங்களில் ஒன்று கோப்ரா. படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட்டதாம். இன்னும் சில காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கவேண்டி இருக்கிறதாம். ஆனால், கொரோனா தொற்று காரணமாக ரஷ்யா செல்ல முடியாமல் படக்குழு திணறி வந்தது. படமும் முடியாமல் இழுத்து கொண்டே இருந்தது.

இதனால், படக்குழு தற்போது ஒரு முடிவு எடுத்துள்ளது. அதாவது, முழுவதும், க்ரீன் மேட் வைத்து படத்தை எடுத்துவிட்டு சிஜி வைத்து கிராபிக்ஸ் மூலம் ரஷ்யாவில் எடுத்தது போல மேட்ச் செய்துவிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதனால், சென்னையில் அதற்கான பணிகளை படக்குழு துவக்கியுள்ளதாம்.

விரைவில் கோப்ரா படத்திற்கான அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.