# Breaking- ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர்!

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.,க்கள் ,8 போலீசார் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிய  கான்பூர் என்கவுன்டர் வழக்கில் தேடப்பட்டு வந்த  ரவுடி  விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகியட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே ரவுடியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது ரவுடி கும்பல் ஆனது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது.

Image

இந்த துப்பாக்கி சூட்டில்  ஒரு  டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 8 போலீசார் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 போலீசார் படுகாயம் அடைந்தனர்.இந்நிகழ்வு அம்மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் தலைமறைவானள ரவுடி விகாஷ் துபேயை  மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில்  நகரில் நேற்று பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  துபேயின் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபேவை  இன்று காலை போலீசார் காரில் அழைத்துவந்துள்ளனர்.

Image

அவ்வாறு காரில் அழைத்து வரும் போது மழையால்  பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Image

இந்நிலையில் இவ்விபத்தை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபேவை தப்பிக்க முயன்ற போது    என்கவுன்டரில்  சுட்டுக்கொன்றதாகவும், துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ரவுடி விகாஸ் துபே மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
kavitha