சிம்புவுடன் இணையவிருந்த வெற்றிமாறன்? சுரேஷ் காமாட்சி சொன்ன கதை!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஏற்கனவே வடசென்னை திரைப்படத்தில் தனுஷுடன் நடிக்கவிருந்தார். அதன்பிறகு கால்ஷீட் பிரச்சனை மற்றும் கதை சரியாக இல்லை என்று அந்த படத்தில் நடிக்க சிம்பு மறுத்துவிட்டார். சிம்புவிடம் வெற்றிமாறன் வடசென்னை கதையை கூறியது வேறு மாதிரியான கதை. பிறகு வடசென்னை கதையை வேறு மாதிரி மாற்றி அமைந்து வெற்றிமாறன் படத்தை இயக்கினார்.

இருப்பினும் சிம்பு படத்தில் நடிக்காதது ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே அமைந்தது என்றே சொல்லலாம்.எனவே சிம்பு வெற்றிமாறன் கூட்டணி எப்போது இணையும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதனையடுத்து, வடசென்னை படத்திற்கு பிறகு வெற்றி மாறன் மற்றும் சிம்பு இருவரும் ஒரு படத்தில் இணையவிருந்தார்களாம்.

SK21 படத்தின் கதை இதுவா? வெளியான புதிய தகவல்!!

ஆனால், சிம்பு அந்த நேரம் மாநாடு படத்தில் நடித்து கொண்டிருந்த காரணத்தால் அந்த படம் நடக்காமல் போய்விட்டதாம். இந்த தகவலை பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சுரேஷ் காமாட்சி ” வெற்றிமாறன் சாருடன் பணிபுரிய விரும்பினேன. அதனால் வெற்றிமாறன் சாரை அணுகினேன்.

வெற்றிமாறன் சார் சிம்புவுக்காக ஒரு கதை வைத்து இருந்தார். அந்த படமும் உருவாகவும் இருந்தது. ஆனால் பின்னர் சில காரணங்களால் அந்த படத்தை அப்டியே விட்டுவிட்டோம். அதன் பின் நாங்கள் வெங்கட்பிரபுவை தொடர்பு கொண்டு மாநாடு படத்தை  தொடங்கினோம்” என கூறியுள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் ஒரு முறையாவது இருவரும் இணைந்து படம் செய்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment