வெங்கட் பிரபுவின் அடுத்த படம் இவருடன் தான்.! அவரே கூறிய தகவல்.!

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Venkat-Prabhu-1-1024x683

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே மன்மத லீலை படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

அது என்னவென்றால், வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் நாக சைதன்யாவுக்கு ஒரு கதை கூறியதாகவும்,அந்த கதை அவருக்கு பிடித்து ஓகே சொல்லிவிட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் சமீபத்தில் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு “அடுத்ததாக நாக சைதன்யா வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளேன்..விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.” வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் கிடைத்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.