வெங்கட் பிரபுவின் புதுப்படம்… டைட்டிலுடன் வெளியான மிரட்டலான பர்ஸ்ட் லுக்.!

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக நாகசைதன்யாவின் 22-வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாகசைதன்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நாகசைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்க படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்து வருகிறார்கள். தற்காலிகமாக NC22 என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன்- கல் நெஞ்சங்களையும் கலங்க வைத்தடாப் 5 கிளைமாக்ஸ்.. மீண்டும் கண்ணீர் சிந்திவிடாதீர்கள்.!

அதன்படி, இந்த திரைப்படத்திற்கு “கஸ்டடி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் நாகசைதன்யா போலீஸ் மற்றும் துப்பாக்கிகளுக்கு நடுவே ரத்த கரையுடன் நிற்பது போல கட்டப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

நாகசைதன்யாவின் படங்களிலேயே அதிக பொருட் செலவில் இந்த திரைப்படம் உருவாகி வருவதாலும், படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருவதாலும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment