படத்தின் களமே “மாநாடு” தான்- இயக்குனர் வெங்கட் பிரபு ஓபன் டாக்..!

மாநாடு படத்திற்கான தலைப்பின் பின்னணி குறித்து சில விஷியங்களை இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.  

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், பிரேம் ஜி, கருணாகரன், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, போன்றார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் மாநாடு படத்தின் டீசரை வெளியிட்டனர். அதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு தலைப்பின் பின்னணி பற்றி சில விஷியங்களை கூறியுள்ளார், இது குறித்து வெங்கட் பிரபு கூறுகையில், “இந்த படத்தில் நான் இதுவரை பண்ணாத பல விஷியங்களை செய்துள்ளேன், மாநாடு என் மனதிற்கு பிடித்த தலைப்பு. இந்த படம் நடிகர் சிம்புவிற்கு பரிமாணமாக இருக்கும்.

ஒரு மாநாட்டை வித்தியாசமான காணோட்டத்தில் காற்ற முயற்சி செய்துள்ளேன். படத்தில் வேற மாறி அரசியலை காட்டிருக்கிறேன். படத்தின் முக்கியமான களமே மாநாடு தான். அதனால் தான் ,மாநாடு என்று டைட்டில் வைத்துள்ளளோம். இந்த படம் பார்க்கும் அனைவரும் இந்த படம் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.