திருச்சி முருகப்பட்டில் செயல்பட்டு வரும் வெடிமருந்து ஆலையில் 2016ல் நடந்த விபத்தில் 19 பேர் பலியானார்கள். இந்த விபத்தால் அந்த வெடிமருந்து ஆலைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்த தொழிற்சாலை வழக்கு தொடர்ந்தது.
ஆலை இயங்குவது தொடர்பாக மக்களின் கருத்தை கேட்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து மத்திய வெடிபொருள் கட்டுப்பாடு அதிகாரிக்கு ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.