புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை, கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போட வேண்டும் என கெடு விதித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ஒவ்வொரு மாநில அரசும் அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை, கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போட வேண்டும் என கெடு விதித்துள்ளது. புதுச்சேரி அரசு, கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் பல்வேறு சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறை ஆணையர் சுந்தரேசன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி மாநிலத்தில் தங்கும் விடுதிகள், கடைகள், உணவகங்கள், இதர வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…