உத்தராகண்ட் வெள்ளம் : 56 பேரின் உடல்கள் மீட்பு

உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 56 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள பனிச்சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று தகவல் வெளியாகியிருந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேலும், தேசிய பேரிடர் மீட்பு முழு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மீட்புப்பணியில் இறந்தவர்களில் இதுவரை 56 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மாநில பேரிடர் மீட்பு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.