நார்வேயில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்து- 4 அமெரிக்கர்கள் உயிரிழப்பு..!

நார்வேயில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) போர் பயிற்சியின் போது விமான விபத்தில் நான்கு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் இன்று இந்தத் தகவலைத் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த விபத்தில் நான்கு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக ஜோனாஸ் ஸ்டோர் ட்வீட் செய்துள்ளார்.

அவர் ட்விட்டரில், ‘இந்த அமெரிக்க வீரர்கள் நேட்டோவின் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். நோர்வே இராணுவம் கூறுகையில், விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க கடற்படையின் V-22B Osprey விமானமாகும்.

நேட்டோ உறுப்பு நாடுகள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன:

நேட்டோ உறுப்பு நாடுகளின் வீரர்கள் கடுமையான குளிருக்கு நடுவே நார்வே ராணுவத்துடன் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். இந்த பயிற்சி உக்ரைன் போருக்கு நீண்ட நாட்களுக்கு  முன்பே கொடுக்கப்பட்டது என நார்வே தெரிவித்துள்ளது.

author avatar
murugan