அமெரிக்க சுதந்திர தினவிழாவில் துப்பாக்கி சூடு : கொலையாளி மீது 117 வழக்குகள்…

அமெரிக்க சுதந்திர தினத்தில் 7 பேரை கொலை செய்த கொலைகாரன் மீது மொத்தமாக 117 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அண்மையில் ( ஜூலை 4 ) நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சிகாகோ மாகாண பகுதியில் திடீரென ராபர்ட் கிரிமோ எனும் 22 வயது இளைஞன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டான்.

இதில், 7 பேர் கொல்லப்பட்டனர். அந்த கொலைகாரன் சம்பவத்தன்று பெண் வேடமணிந்து தப்பிக்க நினைத்தான். ஆனால், அன்று மாலையே அந்த கொலைகாரனை போலீசார் பிடித்துவிட்டனர். மேலும், அவனிடம் இருந்து பல்வறு துப்பாக்கி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் அந்த துப்பாக்கி சூடு நிகழ்வின் போது 7 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். இதனால் இதுவரை அந்த கொலைகாரன் மீது மொத்தமாக 117 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment