கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மத்திய அமைச்சர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, கடந்த மாதம் 28 ஆம் தேதி கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வந்தார். பிகார் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பீகார் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது அவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், தனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதாகவும், கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்திய மற்றும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.