மத்திய ‘ஜல் சக்தி’ அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி.!

மத்திய ‘ஜல் சக்தி’ அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்துக்கு கொரோனா தொற்று  உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதி.

மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்க்கு கொரோனா தொற்று உறுதி அவர் தற்போது சிகிச்சைக்காக குர்கானின் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது ட்வீட்டர் பக்கத்தில், சில அறிகுறிகளைக் கவனித்த பிறகு, நான் கொரோனா பரிசோதனை செய்தேன். சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானதால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளேன் என்றார்.

கடந்த சில நாட்களில் என்னை தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் தயவுசெய்து ஆரோக்கியமாக இருங்கள் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என்று சேகாவத் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.