கலிபோர்னியாவில் கட்டுக்குள் வராத காட்டு தீ – 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலால் 367 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் கணக்கிலான காடுகள் உள்ளிட்ட நிலப்பரப்புகள் எரிந்து நாசமாகியுள்ளது. 480 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி உள்ளதோடு, 6 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

காட்டுத் தீயை கட்டுப்படுத்த 375க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 10 ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். அங்கிருந்த 1.75 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தீ கட்டுக்குள் வராததால் கலிபோர்னியா மாகாணம் ஆஸ்திரேலிய அரசின் உதவியை நாடியுள்ளது.

author avatar
Rebekal