தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பை தங்கள் நிறுவனத்திற்கும் வழங்க வேண்டும் என சீரம் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே, மக்கள் பலரும் தற்போது தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் தற்போது பல இடங்களில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விரைவில் வெளிநாட்டு தடுப்பூசிகளான பைசர் மற்றும் மாடர்னா இந்தியாவில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த மருந்துகளுக்கு மத்திய அரசு காப்பீடு வழங்கும் என கூறப்படுகிறது. அதாவது தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் இழப்பீடு கோர முடியாத அளவிற்கு பாதுகாப்பை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பைசர் மற்றும் மாடர்னாவுக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பை இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்க கூடிய மருந்து நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு சட்டரீதியான பாதுகாப்பு வேண்டும் என அந்நிறுவனம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…